தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
Published on

தேனி:

பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி என்ற நியூட்டன் (வயது 43). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர் 9 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அந்த சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி, ஒரு வார காலம் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நியூட்டனை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கசாமி என்ற நியூட்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட நியூட்டனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com