

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த 158 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த 60 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 218 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.