சேலம், மேட்டூரில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 22 பேர் விடுவிப்பு

சேலம், மேட்டூரில் தனிமைப் படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சேலம், மேட்டூரில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 22 பேர் விடுவிப்பு
Published on

சேலம்,

சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர்.

இவர்களில் 10 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சேலம் டவுன், ஜாகீர் அம்மாபாளையம், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 14 பேர் சேலம் ஜங்சன் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது தெரியவந்ததால் 24 நாட்களுக்கு பிறகு அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 14 பேருக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரிய வந்ததால் இன்று(நேற்று) விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுரை வழங்கி உள்ளோம் என்றனர்.

இதே போன்று எடப்பாடி பகுதியை சேர்ந்த 5 பேர், சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மேட்டூரில் உள்ள எம்.ஏ.எம். பள்ளியில் அமைக்கப்பட்ட தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருந்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 8 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் நேற்று சேலம் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com