திருவாரூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு பொது வினியோக திட்டத்துக்கு 2,500 டன் அரிசி

திருவாரூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு பொது வினியோக திட்டத்துக்கு 2,500 டன் அரிசி
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

2,500 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதில் 1,250 டன் அரிசி தூத்துக்குடி மாவட்டத்துக்கும், 1,250 டன் அரிசி நெல்லை மாவட்டத்துக்கும் என 2 ஆயிரத்து 500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com