பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி

திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
பொது வினியோக திட்டத்துக்காக 2,500 டன் அரிசி
Published on

திருவாரூர்:

திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுவினியோக திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

2,500 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. பின்னர் அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2,500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com