காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 27 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 27 பேர் கைது
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த ராஜா என்ற வசூல் ராஜா, சந்துரு என்ற சந்திரசேகர், ஹரி என்ற மார்க்கெட் ஹரி, பரத், ஜெய்சங்கர் என்ற சதீஷ்குமார் (வயது 25), சதீஷ் (24), யுவராஜ் (24), பாலமுருகன்(23), இன்பரசு (32), சுரேஷ்குமார் (22), தியாகு என்ற தியாகராஜன் (31), சுரேஷ் என்ற மிலிட்டரி சுரேஷ் (40), ராஜசேகர் (24), பரத் என்ற கபாலி (22), பிரேம்குமார் (22), சீனிவாசன் (30), ஜமால், பிரபாகரன் (28), வினோத் (27), கஜா (28), பாபா(26), விக்னேஷ் (25), தனசேகரன் (34), குமரன் என்ற புஷ்பநாதன்(35), இளையராஜா உள்ளிட்ட 27 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் தவிர, மேலும் 12 ரவுடிகளை காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள், இன்னும் ஒரு வருடத்துக்கு இதுபோல் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி, ஒழுக்கமாக வாழ்வதாக நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com