புனேவில் இருந்து 3 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரத்து 480 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
Published on:
Copied
Follow Us
இந்தநிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 25 பெட்டிகளில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. பின்னர் அவை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.