திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் 3 சிலைகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் சிங்க உருவ கற்சிலை என 3 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் 3 சிலைகள் கண்டெடுப்பு
Published on

திருவள்ளூரை அடுத்த காக்களூர் கிருஷ்ணா கால்வாய் செல்லும் நீர் வழித்தடத்தில் பழங்கால அம்மன் சிலைகள் கிடப்பதாக திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் அருணா, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சோதனையிட்ட போது 2 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட அம்மன் சிலை, 2 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட சிமெண்டாலான பழங்கால அம்மன் சிலை மற்றும் 9 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட சிங்க உருவ கற்சிலை என 3 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட 3 சிலைகளையும் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் உதவியுடன் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மேலும் இந்த சிலைகளின் பழமை தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com