

நாக்பூர்,
புலிக்குட்டிகள் மூன்றும் அப்போது அந்த வழியாக வந்த பல்லார்ஷா- கோண்டியா பயணிகள் ரெயில் மோதியதில் உடல் சிதைந்து உயிரிழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த புலிக்குட்டிகளை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவை பிறந்து 6 மாதம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
இதேபோல் நாசிக் மாவட்டம் மாலேகாவ் ஹடானே- தகிதி கிராமத்தில் உள்ள மாலேகாவ்- குசும்பா சாலையை கடக்க முயன்ற 1 வயது சிறுத்தைப்புலி ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த 2 சம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.