திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 3,469 வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 3,469 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 3,469 வழக்குகளுக்கு தீர்வு
Published on

லோக் அதாலத்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் லோக் அதாலத் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி தலைமை தாங்கினார்.

அப்போது லோக் அதாலத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்டவர்களுக்கு தீர்வு தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மகளிர் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சுபத்ரா தேவி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் நீதிபதி சரஸ்வதி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வித்யா, குடும்ப நல கோர்ட்டு நீதிபதி மற்றும் மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ரவி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலாராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சாண்டில்யன், சார்பு நீதிபதி மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு கோர்ட்டு நீதிபதி உமா, மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு கோர்ட்டு நீதிபதி அருந்ததி மற்றும் வக்கீல்கள் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

4 ஆயிரத்து 916 வழக்குகள்

அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய தாலுகா கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 916 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 469 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.40 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 564 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com