கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்

கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்.
கொரோனா விதிமுறைகள் மீறல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்
Published on

சென்னை,

கொரோனா காலம் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளம் மூலமாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல அமலாக்க குழுக்களின் கள ஆய்வின்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முதல் இதுவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,047 நிறுவனங்கள் மற்றும் 46,755 தனிநபர்களிடம் இருந்து ரூ.3.79 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 925 கடைகள் மூடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com