

இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 6 லட்சத்து 96 ஆயிரத்து 109 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 23 பெட்டிகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 350 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 17 பெட்டிகளில் 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. ஒரே நாளில் சென்னை வந்த 4 லட்சத்து 70 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.