சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 454 மனுக்கள் பெறப்பட்டன

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 454 மனுக்கள் பெறப்பட்டன.
சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 454 மனுக்கள் பெறப்பட்டன
Published on

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி என 454 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பாலகங்காதரன், உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பண்டரிநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com