முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
முதியவருக்கு 5 ஆண்டு சிறை
Published on

தேனி:

தேனி அல்லிநகரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 61). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்காள், தங்கையான 9 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுமி ஆகிய இருவருக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் இந்த விவரத்தை தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோர் தரப்பில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு அளித்தார்.

முனுசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாநில அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து முனுசாமியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com