தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு

மங்கலம்பேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுபோனது. மேலும் 2 வீடுகளில் திருட முயற்சி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டு
Published on

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன்(வயது 24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தனது தாயாருடன் வீட்டில் தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவின் மேற்கூரை ஓடு பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை காணவில்லை.

இதுகுறித்து மணிகண்டன் மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் நடத்தினர்.

விசாரணையில், நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து பூஜை அறையில் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள 2 வீடுகளின் கதவுகளையும் மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போடவே அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com