தேவதானப்பட்டி அருகே 52 அடியை எட்டிய மஞ்சளாறு அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை 52 அடியை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி அருகே 52 அடியை எட்டிய மஞ்சளாறு அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 57 அடி ஆகும்.

இந்த அணையில் வழக்கமாக அக்டோபர் மாதம் 15-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டு நீர்வரத்து போதியஅளவு இல்லாத காரணத்தால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டினால் முதற்கட்டமாகவும், 53 அடியை எட்டினால் 2-ம் கட்டமாகவும், 55 அடியை எட்டினால் 3-ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கமாகும்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51 அடியை தாண்டியது. இதனால் அணையின் கரையோரத்தில் உள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேற்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 331 கன அடியாக இருந்தது.

நீர்மட்டம் 55 அடியை எட்டியதும் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com