திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 6 பேர் கண்காணிப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 6 பேர் கண்காணிப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 114 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 112 பேர் பூரண குணமடைந்து திருப்பூர் திரும்பியுள்ளனர். இதில் கோயம்பேடு சென்று திருப்பூர் திரும்பிய 2 லாரி டிரைவர்களும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று வரவில்லை. தற்போது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 6 பேர் மட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக வருகிறவர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. மேலும், கொரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று சந்தேகம் இருக்கிறவர்கள் சிகிச்சை பெற கொரோனா வார்டு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டனர்.

தற்போது கொரோனா வார்டில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்களுக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளித்து வருகிறோம். இவர்களுக்கு பரிசோதனை செய்ததில் சளி, ரத்த மாதிரியில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் சில நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதன் பின்னரே வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com