காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 7 பேர் கைது

காஞ்சீபுரம் செவிலிமேடு பாலாறு, திருப்பருத்திக்குன்றம் வேகவதி ஆற்றுப்படுகை போன்ற பகுதிகளில் நேற்று காலை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், போலீஸ் ஏட்டு சிவராஜன் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 7 பேர் கைது
Published on

அப்போது அந்தந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை மாட்டு வண்டியில் கடத்தியது தெரிய வந்தது. அதையொட்டி மணல் கடத்தலில் ஈடுபட்ட செவிலிமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 28), ரவி (30), திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்கிற முஸ்தபா (38), ராஜேஷ்குமார் (25), நரேஷ் (20), சரோன் (19), புஞ்சையரசன் தாங்களை சேர்ந்த சுதாகரன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com