மரங்கள் வெட்டி கடத்திய 8 போ கைது

நத்தம் அருகே மரங்கள் வெட்டி கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மரங்கள் வெட்டி கடத்திய 8 போ கைது
Published on

நத்தம்:

நத்தத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 48). இவருக்கு பொய்யாம்பட்டி பகுதியில் தென்னந்தோப்புகள் உள்ளது. இந்த தோப்பில் மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்துவதாக நத்தம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு தென்னை மரங்களை சிலர் வெட்டி கடத்தி கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டம் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி (40), இளையராஜா (25), ராமசாமி (23), மோகன் (24), ரமேஷ் (26), சரவணன் (27), சாத்தையா (25), மேலூர் கொடுக்கம்பட்டியை சேர்ந்த நெவிலியப்பன் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கடத்திய மரங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பொய்யாம்பட்டியை சேர்ந்த மதி, ராஜா, சதீஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com