பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு

பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு வழங்க மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பேறு கால விடுப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 ஆயிரத்து 400 பெண் நடத்துனர்களும் அடங்குவர். தற்போது பெண் நடத்துனர்களுக்கு சம்பளத்துடன் 6 மாதம் பேறு கால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதை 9 மாதமாக அதிகரிக்க மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி அப்ஜித் போஸ்லே கூறியதாவது:-

கர்ப்ப காலத்தில் பணியில் இருந்த 6 பெண் நடத்துனர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பெண் நடத்துனர்களின் பேறு கால விடுப்பை 9 மாதமாக அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். மேலும் கர்ப்பிணி நடத்துனர்களுக்கு அலுவலக பணி வழங்கவும் முடிவு செய்து உள்ளோம் என அவர் கூறினார்.

போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவிற்கு பெண் நடத்துனர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com