மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டையில் ரூபாய் நோட்டுகளை ஒட்டி வந்த நபரால் பரபரப்பு

தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டையில் ரூபாய் நோட்டுகளை ஒட்டி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டையில் ரூபாய் நோட்டுகளை ஒட்டி வந்த நபரால் பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, மனுக்கள் கொடுத்தனர்.

தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தை சேர்ந்த பரமசிவன் மற்றும் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பரமசிவன், போலி ரூபாய் நோட்டுகளை தனது சட்டையில் ஒட்டி இருந்தார். இதனை பார்த்த போலீசார், அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

திடீரென பரமசிவன் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் தனது சட்டையை கழிற்றிவிட்டு, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் அவர்களை சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, கோரம்பள்ளத்தில் உள்ள குளத்தை தூர்வார கோரி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளத்தை தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தான் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளை சட்டையில் ஒட்டி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே 2 பேரை போலீசார் அழைத்து சென்றதை கண்டித்து முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கீதாஜீவன் எம்.எல்.ஏ. அவர்களிடம் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com