முயல் வேட்டையாட முயன்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

அய்யலூர் அருகே முயல் வேட்டையாட முயன்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
முயல் வேட்டையாட முயன்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த சிலர் தங்களின் ஊர் குலதெய்வ வழிபாட்டுக்காக குளத்தூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதிகளில் முயல்களை வேட்டையாட செல்வதாக அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் விஜயகுமார் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த 20 நபர்களை சுற்றி வளைத்து பிடித்து அய்யலூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் குப்பாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் என்பதும், முயல்களை வேட்டையாட வனப்பகுதிக்குள் சென்றதும் தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின்படி 20 நபர்களுக்கும் தலா ரூ.750 வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனிமேல் இதுபோல் வனவிலங்குகளை வேட்டையாடக் கூடாது என்று கூறி, வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com