பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவவீரர் பலி

ஆரணியில் பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவவீரர் பலி
Published on

ஆரணி,

கண்ணமங்கலத்தை அடுத்த பெரிய அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 54), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சங்கீதா பெரியஅய்யம்பாளையம் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆவார்.

சங்கர் ஆரணியில் உள்ள ராணுவ கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னைக்கு சென்று கேண்டீனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வேலூரில் உள்ள ராணுவ கேண்டீனில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து ஆரணிக்கு அரசு பஸ்சில் சென்றார்.

சக்கரத்தில் சிக்கி பலி

ஆரணி காந்தி ரோடு ஜெமினி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சங்கர் பஸ்சில் இருந்து இறங்கினார். அதற்குள் பஸ் எடுத்ததால் சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com