நிலக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

நிலக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
நிலக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆனது.

இதற்கிடையே நேற்று ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதேநேரம் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com