

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது50). இவர் சம்பவத்தன்று இச்சடி பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.