இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர் கைது

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர் கைது
Published on

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 35), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கனிமொழி(25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கனிமொழியின் நடத்தையில் பாக்கியராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், வீட்டில் இருந்த அரிவாளால் கனிமொழியை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த கனிமொழி வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கனிமொழி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com