சூளைமேடு பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது

சூளைமேடு பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது.
சூளைமேடு பகுதியில் செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

சென்னை,

சென்னை அமைந்தகரை அவ்வைபுரத்தில் வசித்து வருபவர் முங்ரிங்கம் சோரா (வயது 25). இவர், நேற்று முன்தினம் இரவு சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், முங்ரிங்கம் சோரா கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.

இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட செம்மஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஜோப்பாரா மணிகண்டனை (25) கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போனும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com