கோவையில் விபத்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - கணவன் கண் எதிரே பரிதாபம்

கோவையில் நடந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவன் கண்எதிரே பெண் பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவையில் விபத்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - கணவன் கண் எதிரே பரிதாபம்
Published on

கோவை,

திருப்பூர் பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). இவருடைய மனைவி சுமதி (49). உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருப்பூரில் இருந்து மனோகரன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தார்.

கோவை அவினாசி ரோடு சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

அதில் சுமதி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. கணவன் கண் எதிரே சுமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனோகரன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமதியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சொப்புணேஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com