நெல்லை அருகே விபத்து: சிறுவன் உள்பட 2 பேர் பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது.
நெல்லை அருகே விபத்து: சிறுவன் உள்பட 2 பேர் பலி
Published on

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் திருமலைக்குமாரசாமி (வயது 34). இவர் நெல்லையில் உள்ள ஜவுளிக்கடையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது திருமண நாள் என்பதால் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட இருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்த கென்னடி மகன் ரித்திஷ் சந்தர் (14). இவன் விடுமுறைக்காக நெல்லையில் உள்ள தனது உறவினர் வீட்டில் சில நாட்களாக தங்கி இருந்தான். திருமலைக்குமாரசாமி ஊருக்கு செல்வதை அறிந்த உறவினர், ரித்திஷ் சந்தரையும் அவருடன் அனுப்பி வைத்தார்.

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரித்திஷ் சந்தர் பரிதாபமாக இறந்தான். திருமலைக்குமாரசாமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருமலைக்குமாரசாமியும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com