

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, கள்ளிமந்தையத்தில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக மதுரை, திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
கள்ளிமந்தையத்தில் இந்த சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.
இந்த பள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.