நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கு நோட்டீஸ்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு செய்து நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கு நோட்டீஸ்
Published on

பெங்களூரு,

நடிகர் துனியா விஜய், உடற்பயிற்சியாளர் மாருதி கவுடாவை தாக்கியது தொடர்பாக ஐகிரவுண்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வேளையில் துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா, 2-வது மனைவி கீர்த்தி கவுடா இடையே பிரச்சினை உருவானது. இதுதொடர்பாக 2 பேரும் தனித்தனியாக கிரிநகர் போலீசில் புகார் செய்தனர். அத்துடன் துனியா விஜய்-நாகரத்னா தம்பதியின் மகள் மோனிகாவை தாக்கியதாக நடிகர் துனியா விஜய் உள்ளிட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுபோன்ற தொடர் புகார்களால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சட்டம்-ஒழுங்கிற்கு சீர்குலைவு ஏற்படுத்துவதாக கூறி கிரிநகர் போலீசார் நடிகர் துனியா விஜய், அவருடைய முதல் மனைவி நாகரத்னா, 2-வது மனைவி கீர்த்தி கவுடா உள்பட 7 பேர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தென்மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை முன்பு ஆஜராக வேண்டி நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கும் கிரிநகர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் 7 பேரும் நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com