அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொடியேற்றம் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்றார்

திருவள்ளூர், அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டப்பட்டதை முன்னிட்டு, கொடியேற்றம் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்றார்.
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொடியேற்றம் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்றார்
Published on

திருவள்ளூர்,

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று கொண்டாட்டப்பட்டதை முன்னிட்டு, திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அ.தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அவருடன் திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளருமான கமாண்டோ அ.பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் கோ.சீத்தாராமன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர் வளையாபதி, நகர பொருளாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.நேசன், மணவாளநகர் நரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மணவாளநகர், கடம்பத்தூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.எல்.ஏ.கே.எஸ்.விஜயகுமார் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் மு.க.சேகர், நிர்வாகிகள் மனோஜ் இமயம், சரவணன், ராஜேந்திரன், கோட்டக்கரை ரவி, மகளிரணி சாந்தி, சுசிலா, பேபி லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com