

பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி அரசு, கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது ஒரு கொடூரமான நகைச்சுவை என்றும் அவர் விமர்சித்தார். பிரதமருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விவசாயிகளின் நலனை பாதுகாக்க எங்கள் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.