தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
Published on

விழுப்புரம்,

மரக்காணம் அருகே உள்ள கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 45), பிரபல சாராய வியாபாரியான இவர் மீது மரக்காணம், பிரம்மதேசம், கோட்டக்குப்பம் பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாராய வழக்கில் இளங்கோவனை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் இளங்கோவனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com