

புதுச்சேரி,
புதுச்சேரியில் வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுபான கடைகள், பார்கள் என அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை துணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார் ஜோதி தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு புதுச்சேரியில் வருகின்ற 15.01.2022 மற்றும் 18.01.2022 ஆகிய தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள், ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.