கொரோனா பாதித்த மேலும் 13 பேர் ‘டிஸ்சார்ஜ்’:தூத்துக்குடியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 328 ஆக உயர்வு

தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதித்த மேலும் 13 பேர் ‘டிஸ்சார்ஜ்’:தூத்துக்குடியில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 328 ஆக உயர்வு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 427 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 315 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். 3 பேர் இறந்து உள்ளனர்.

மற்றவர்கள் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த 13 பேரும் குணமடைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி தலைமையிலான டாக்டர்கள் வழியனுப்பி வைத்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு சத்து மருந்துகளையும் கொடுத்து அனுப்பினர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com