அரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று

அரியலூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,736 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,354 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 329 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com