கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (வயது 37). இவர் கடந்த மாதம் 15-ந் தேதி செங்குளம் காலனி அருகே உள்ள குளத்துக்கரையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலச்செவலை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா (23), முருகன் மகன் சிவா என்ற மொட்டை சிவா (24), கீழச்செவலை சேர்ந்த சங்கர் மகன் பேச்சிமுத்து (20) உள்பட 9 பேரை கைது செய்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நயினார்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் என்ற பெரிய வீட்டு முருகனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முருகனை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com