திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 614 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 41 வயது ஆண் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதன் மூலம் கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 947 ஆனது. அதேநேரம் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com