மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- காஞ்சீபுரம் கலெக்டர்

மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- காஞ்சீபுரம் கலெக்டர்
Published on

மணிமேகலை விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை ரூ.2.08 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இந்த மாதம் 31-ந் தேதிக்குள்

அதையொட்டி மணிமேகலை விருது தேர்வுக்கான அரசாணை வாயிலாக மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதுக்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே 2021-22-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்களை, இந்த மாதம் 31-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com