

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகத்தில், உதவி சார்பதிவாளராக பணியாற்றி வந்தவர் ரவிகுமார். இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக, ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் உதவி சார்பதிவாளராக (பொறுப்பு) வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர், சிசிச்சை பலனின்றி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.