காஞ்சீபுரம் வையாவூரில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு பாதை - அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்

காஞ்சீபுரம் வையாவூரில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு பாதையை அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்.
காஞ்சீபுரம் வையாவூரில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு பாதை - அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வையாவூரில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை, ஜவகர்லால் காய்கறி சந்தை மற்றும் குருஷேத்திரா பள்ளியில் செயல்பட்டு வரும் மளிகை பொருட்களின் பல்பொருள் அங்காடி ஆகிய 3 இடங்களில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு உள்ள கிருமிநாசினி தெளிப்பு பாதைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில், அமைச்சர் பென்ஜமின் திறந்து வைத்தார்.

அத்துடன் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் காஞ்சீபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவி பொருட்களையும் அவர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஒரகடம் அடுத்த வாரணவாசி ஊராட்சியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்பட 300 பேருக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com