அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு - டாக்டரை மிரட்டி ஆஸ்பத்திரி கண்ணாடிகளை நொறுக்கிய நபருக்கு வலைவீச்சு

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் பரிதாபமாக இறந்தார். டாக்டரை மிரட்டி ஆஸ்பத்திரி கண்ணாடிகளை நொறுக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு - டாக்டரை மிரட்டி ஆஸ்பத்திரி கண்ணாடிகளை நொறுக்கிய நபருக்கு வலைவீச்சு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் டாக்டர் நரேந்திர பாபு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுகுணா தேவி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பதாக கூறி சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் நரேந்திரபாபு அவருக்கு உரிய சிகிச்சை அளித்தார். இருப்பினும் சுகுணா தேவி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இதை அறிந்த அவரது உறவினரான வினோத் என்பவர் பணியில் இருந்த டாக்டர் நரேந்திர பாபுவை தகாத வார்த்தையால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் ஆஸ்பத்திரியின் ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ்குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி டாக்டருக்கு மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள வினோத் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com