ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி கர்ப்பிணி சாவு

திருவள்ளூர் அருகே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி கர்ப்பிணி சாவு
Published on

சென்னை,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு சமத்துவபுரம் மேட்டு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி மேரி (30). இவர்களது மகன் பெயித் சாமுவேல் (2). 8 மாத கர்ப்பிணியான ஜான்சிமேரி அவ்வப்போது உளுந்தையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சிமேரி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் பேரம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சிமேரி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com