குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக்கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 411 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச சலவைப்பெட்டி, நரிக்குறவர் நலவாரியம் மூலம் 7 பேருக்கு மாதம் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் 22 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். அதை தொடர்ந்து தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சக்கர நாற்காலி, மடக்கு குச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார். மொத்தமாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 822 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com