

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 42). கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், இரும்பு கம்பியால் நாகராஜின் தலையில் தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் கொலை வழக்காக பதிவு செய்து, நாகராஜை அடித்துக்கொன்ற சிறுவன் யார்? என விசாரணை நடத்தினார்.