கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மகன்-மருமகளை சேர்த்து வைக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

தேனி:

உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் மனைவி அல்போன்ஸ் (வயது 55). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த கூட்டரங்கின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தற்கொலைக்கு முயன்றது குறித்து அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அல்போன்ஸ் கூறுகையில், "எனது மகன் ராஜிவும், அவருடைய மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். அவர்களை சேர்த்து வைக்குமாறு உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழிக்கின்றனர். இதனால், எனது மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்கக்கோரி தற்கொலைக்கு முயன்றேன்" என்றார். பின்னர் அவரை விசாரணைக்காக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அறிவுரைகள் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com