கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்
Published on

காரைக்கால்,

புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு 10 மாத சம்பளமும், தினக்கூலி ஊழியர்களுக்கு 13 மாத சம்பளமும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த ஊதியத்தை விரைவில் வழங்கக்கோரியும், தற்போதுள்ள பாப்ஸ்கோ மேலாண் இயக்குனரை மாற்றிவிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியை மேலாண் இயக்குனராக நியமிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் பாப்ஸ்கோ ஊழியர்கள் கடந்த 8-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 7-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அரசின் கவனத்தை திருப்புவதற்காக காரைக்கால் கோவில்பத்து பாப்ஸ்கோ அலுவலக வாயிலில் ஊழியர்கள் 4 பேர் மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த போராட்டத்திற்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். காரைப்பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com