இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்தேன் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்தேன் என கைதான பெண், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்தேன் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி எழில்நகர் 6-வது கிராசை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் தனபால் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் அருள்சத்யா (20) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் தனபால் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட தனபாலின் மனைவி அருள்சத்யா, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மோட்டூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டியை சேர்ந்த தனது கள்ளக்காதலனான லாரி டிரைவர் மணிகண்டன் என்கிற சரவணன் (25) உதவியுடன் கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருள்சத்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அருள்சத்யா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

தனபாலுக்கும், எனக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

எனது உல்லாச வாழ்க்கைக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதை எனது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தெரிவித்தேன். அதன்படி 9-ந் தேதி இரவு நானும், எனது கணவரும் தூங்க சென்றோம். அந்த நேரம் நள்ளிரவில் மணிகண்டன் எங்களின் வீட்டிற்கு வந்தார். பின்னர் மணிகண்டன், கத்தியால் எனது கணவர் தனபாலை தலை பகுதி, இடது காது அருகில் வெட்டி கொலை செய்தார். மேலும் நானும், மணிகண்டனும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த எனது கணவர் தனபாலை கத்தியால் குத்தினோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com