

திரு.வி.க.நகர்,
சென்னை பாடிகலைவாணர்காலனியைச் சேர்ந்தவர் கண்ணாத்தாள்(வயது 45). இவர்,தனியார் பெண்கள்விடுதியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் பாக்யநாதன், சரிவரவேலைக்கு செல்லாமல்தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார்.
நேற்றுகாலை பாக்யநாதன், கண்ணாத்தாள்வேலை செய்யும்விடுதிக்கு சென்றுகுடிப்பதற்கு பணம்கேட்டு அவருடன் தகராறு செய்தார். ஆனால் கண்ணாத்தாள் பணம் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாக்யநாதன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால்மனைவி கண்ணாத்தாளைசரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் தலை, மார்பு,இடுப்பு பகுதியில்பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்துஜெ.ஜெ.நகர்போலீசார்வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியபாக்யநாதனை தேடிவருகின்றனர்.